
திருப்பூர்: தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பில், திருப்பூரில் அனைத்து தொழில் அமைப்பு சங்கங்களும் ஒருங்கிணைந்து, திருப்பூர் சாய உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று ஆலோசனை மேற்கொண்டன.
இதில் சைமா, நிட்மா, டாட், டீமா, டெக்பா, சிம்கா, நிட்டிங், டையிங், காம்பக்டிங், பிரிண்டிங், எம்ப்ராய்டரி உட்பட திருப்பூரில் உள்ள அனைத்து சார்பு சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதில், 430 சதவீதம் உயர்த்திய நிலைக்கட்டணம், பரபரப்பு நேர ( பீக் ஹவர் ) கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். ‘3பி’யில் இருந்து ‘3ஏ1’ நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment