
குன்னூர்: தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க 130-வது மாநாடு, நீலகிரி மாவட்டம் குன்னூரிலுள்ள உபாசி அரங்கில் நடைபெற்றது. உபாசி தலைவர் ஜெப்ரி ரேபெல்லோ வரவேற்றார்.
மாநாட்டை தொடங்கி வைத்து மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை கூடுதல் செயலாளர் அமர்தீப் சிங் பாட்டியா பேசும்போது, "காபி மற்றும் தேயிலை உற்பத்தியாளர்கள், தங்கள் தயாரிப்புகளில் புதுமைகளை புகுத்த வேண்டும். சர்வதேச சந்தையை மற்றவர்கள் ஆக்கிரமிப்பதற்காக உற்பத்தியாளர்கள் விட்டுக் கொடுக்காமல் இருப்பதும், அதே சமயம் உள்நாட்டு சந்தைகளுக்கான தயாரிப்புகளின் தரத்தில் சமரசம் செய்யாமல் இருப்பதும் முக்கியம்" என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment