
கோவை: தமிழகத்தில் 7 உட்பட நாடு முழுவதும் உள்ள 23 என்டிசி நூற்பாலைகள் கடந்த 40 மாதங்களுக்கு மேலாக முடங்கி கிடக்கும் நிலையில், 15 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முயற்சிகள் தொடரும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாலை கழகத்துக்கு (என்டிசி) சொந்தமாக நாடு முழுவதும் 123 நூற்பாலைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் பல நூற்பாலைகள் தொடர்ந்து மூடப்பட்டன. தமிழகத்தில் 7 உட்பட நாடு முழுவதும் 23 நூற்பாலைகள் மட்டும் செயல்பட்டு வந்த நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக 2020ம் ஆண்டு மே மாதம் அனைத்து நூற்பாலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தொற்று பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பிய போதும் 23 நூற்பாலைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment