
புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தி காட்டியதன் எதிரொலியாக நேற்று நடைபெற்ற பங்கு வர்த்தகம் மிகவும் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
முதலீட்டாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த நிஃப்டி குறியீட்டெண் வர்த்தகத்தின் இடையே முதன்முறையாக 20,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது. இதுகுறித்து பங்குச் சந்தை வட்டாரங்கள் கூறுகையில், "ஜி20 மாநாட்டில் இந்தியா ராஜ்ஜீய ரீதியில் உருவாக்கிய டெல்லி பிரகடனம் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், பணவீக்கம் குறைந்து வருவது, காய்கறி விலையில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவை வளர்ச்சிக்கு சாதகமான அம்சங்களாக பார்க்கப்படுகின்றன" என்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment