
திருச்சி: கோரைப் பாய் உற்பத்தித் தொழில் கடந்த சில ஆண்டுகளாக கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதால் உற்பத்தியாளர்கள் கவலைய டைந்துள்ளனர். தமிழகத்தில் கரூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, வந்தவாசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கோரைப் புல் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கோரைப் புல்லைக் கொண்டு தயாரிக்கப்படும் பாய்கள் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கோரைப் பாயில் படுத்தால் உடல் சூடு தணிந்து, உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் என்பதால், இன்றும் பலர் கோரைப் பாயில் படுப்பதை விரும்புகின்றனர். ஆனால், நவநாகரீக உலகில் பிளாஸ்டிக் பாய், போர்ம் மெத்தைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் போக்கு அதிகரித்த காரணத்தால் கோரைப் பாய்க்கான தேவை சற்று குறைந்து விட்டதாக கோரைப் பாய் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் முசிறி பகுதியில் கிடைக்கும் கோரைப் புல்லைக் கொண்டு 10 பெரிய நிறுவனங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் விசைத்தறி மூலம் பாய் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment