
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டுக்கூடு வளர்ப்பில் கடந்த சில மாதங்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மட்டுமின்றி விவசாயமும் பிரதான தொழிலாக உள்ளது. நெல், கரும்பு உட்பட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. அதே சமயத்தில் நெமிலி, காவேரிப்பாக்கம், அரக்கோணம், வாலாஜா, திமிரி, பனப்பாக்கம் உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பட்டுக்கூடு வளர்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் விவசாயிகளுக்கு இது லாபகரமான தொழிலாக இருந்து வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment