
புதுடெல்லி: குடிமைச் சேவைகளை ஆன்லைன் மூலமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு ரூ.1,450 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
நாடு முழுவதும் சிறிய நகரங்கள் உட்பட அனைத்து நகரங்களிலும் உள்ள பெரும்பாலான சேவைகள் ஆன்லைன் மூலம் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மாநகராட்சி, நகராட்சிகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தல், கட்டிடங்களுக்கான அனுமதி போன்ற பல்வேறு சேவைகளை அரசுஅலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே மக்களுக்கு ஆன்லைன் மூலமாகவே கிடைக்க மாநிலங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு இந்த திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment