
திருப்பூர்: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக திருப்பூர் தொழில் துறையினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஏ.சக்திவேல் ( பியோ தலைவர் ): மத்திய பட்ஜெட் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. வலுவான இந்தியாவை கட்டமைக்கும் நோக்கில் உள்ளதால் வரவேற்கிறேன். ஆயத்த ஆடைகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதிக்கான மாநில, மத்திய வரிகள் திரும்பப்பெறும் திட்டத்தைமார்ச் 31-ம் தேதி 2026 வரை தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment