
சேலம்: சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பூண்டு விலை அதிகரித்து கிலோ ரூ.520 வரை விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கலக்க மடைந்துள்ளனர்.
சமையலுக்கு அவசிய தேவையாக பூண்டு இருப்பதால், அதன் முக்கியத்துவம் தவிர்க்க முடியாததாக உள்ளது. தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு விளைவிக்கப்படுகிறது. அதேபோல, வட மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டுகளைக் கொண்டே, மக்களின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் பூண்டு மொத்த விற்பனை மையமாக செவ்வாய்ப் பேட்டை பால் மார்க்கெட், லீ பஜார் உள்ளது. இங்கிருந்து நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பூண்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment