
கிருஷ்ணகிரி: தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.27.48 கோடி மற்றும் தென்னை வளர்ச்சிக்கு ரூ.36.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து மா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் சவுந்தர ராஜன் கூறியதாவது: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் மா சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.27.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப் பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கடந்த பட்ஜெட்டில் மா விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டனர். தற்போது, கவாத்து பயிற்சி, 26 ஆயிரத்து 540 ஏக்கர் பரப்பில் பழைய தோட்டங்களைப் புதுப்பிக்க மானியம், 4,380 ஏக்கரில் உள்ளூர் மா ரகங்கள் மற்றும் 250 ஏக்கரில் ஏற்றுமதிக்கு ஏற்ற மா ரகங்கள் உற்பத்தி செய்ய புதிய மாந்தோட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment