
விழுப்புரம்: விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட விழுப்புரம் மாவட்டத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் பல்வேறு கைவினைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழுக்களால் ஆங்காங்கே களிமண், மரம் போன்ற வைகள் கொண்டு சிற்பங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யப்பட்டு, அவைகளை மொத்த வியாபாரிகள் வாங்கி விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். குறிப்பாக, காகித கூழால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளை செய்வதில் இங்கு அதிகமானோர் ஈடுபடுகின்றனர். இருந்த போதிலும் போதிய சந்தை இல்லாததால், தயாரிப்பாளர்களால் மிக குறைந்த அளவே வருவாய் பெறமுடிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment