
சென்னை: தெற்கு ரயில்வேயில் பயணிகள் வசதிக்காக, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டில் ஜனவரி வரை 10 மாதங்களில், 1,807 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக, ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ.149.80 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் கூட்டம் நிரம்பிவழிகிறது. அதிலும், பண்டிகை காலத்தில் ரயில்களின் முன்பதிவு, முன்பதிவில்லாத பெட்டிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும். அந்த நேரத்தில் பயணிகள் நெருக்கடியை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னை எழும்பூர், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதுதவிர, பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment