
புதுச்சேரி: புதுச்சேரி ஆறுகளில் சுற்றுலா படகுகள் விட அனுமதி அளிக்கப்பட்டதால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் 10 கிராம உள்நாட்டு மீனவர்கள் கடும் பாதிப்பில் உள்ளதாக அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுச்சேரியில் பூரணாங்குப்பம், முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம், ஆர்.கே.நகர் சிவலிங்கபுரம், சின்ன வீராம்பட்டினம், பெரிய வீராம்பட்டினம், முதலியார் பேட்டை, கீரப்பாளையம் ஆகிய ஊர்களில் வாழும் உள்ளூர் மீனவர்கள் தங்களது மீன் பிடித் தொழிலை சுண்ணாம்பாறு மற்றும் அரியாங்குப்பம் ஆறுகளில் பாரம்பரியமாக செய்து வருகின்றனர். இந்த ஆறுகளில் கிடைக்கும் குறைந்த அளவு மீன்களை விற்று, தங்களது வாழ்வாதாரத்தை தேடி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment