
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நாளை ( 23-ம் தேதி ) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் கடன் முகாம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் கே.எம்.சரயு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில், ஆட்சியர் அலுவல கத்தில் நாளை ( 23-ம் தேதி ) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் கடன் முகாம் நடைபெறவுள்ளது. முகாமில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் கடன் வழங்குதல், தொழில் கடனுக்கான ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பாக வழங்கப்படும் அரசு சலுகைகள் பற்றி விரிவாக விளக்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment