
சென்னை: பற்றாக்குறை காரணமாக, மின்மீட்டர்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்து நுகர்வோர் வாங்கிக் கொள்ள மின்வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.
வீடுகளுக்கு வழங்கப்படும் மின்இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்படுகிறது. இதில் பதிவாகும் மின்சாரம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு பணம் வசூலிக்கப்படுகிறது. மீட்டர் கோரி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் நுகர்வோருக்கு மீட்டர் வழங்கப்பட வேண்டும். ஆனால், சில இடங்களில் தாமதம் ஏற்படுகிறது. மின்வாரியப் பிரிவு அலுவலகங்களில் மீட்டருக்கு பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, தனியார் நிறுவனங்களிடம் இருந்து மீட்டர்களை நுகர்வோர் வாங்க மின்வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment