
கோவை: ஆயத்த ஆடை, வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்களுக்கான ஏற்றுமதி சார்ந்த ‘ஆர்ஓஎஸ்டிஎல்’ திட்டத்தை 2026 மார்ச் வரை நீட்டிப்பு செய்துள்ள மத்திய அரசின் நடவடிக்கைக்கு தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் ( சைமா ) வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து சைமா தலைவர் சுந்தர ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சுமார் 8 சதவீதம் அளவில் ஜவுளித் துறை பங்காற்றி வருகிறது. நாட்டின் ஜவுளி ஏற்றுமதி 35 முதல் 37 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் தேக்கமடைந்துள்ளது. கரோனாவின் இரண்டாவது அலைக்கு பின் உலக நாடுகளில் திடீரென ஏற்பட்ட தேவை காரணமாக கடந்த 2021-22-ம் நிதியாண்டில் நாட்டின் ஜவுளி ஏற்றுமதி கணிசமாக உயர்ந்தது. புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல திட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment