
உடுமலை: உடுமலை சுற்றுவட்டாரத்தில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.8,000 வரை மானியம் பெறலாம் எனவும், விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனவும் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் கோடை காலத்தில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தர்பூசணி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவது வழக்கம். தாந்தோணி, துங்காவி, மெட்ராத்தி, சங்கராம நல்லூர் உட்பட 50-க்கும் மேற்பட்ட ஊர்களில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment