
புதுடெல்லி: நாட்டில் வறுமை நிலை கணிசமாக குறைந்துள்ளதாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:
புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய கணக்கெடுப்புகளின்படி கிராமப்புறங்களில் மக்களின் நுகர்வு வலுவாக உள்ளது. இதையடுத்து, நகர்ப்புறங்களுடனான அதன் இடைவெளி குறைந்துள்ளது. மேலும், நாட்டில் வறுமை நிலை கணிசமாக 5 சதவீதமாக குறைந்துள்ளது. வறுமை நிலை நுகர்வு செலவின தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்திய கிராமங்களில் உணவுக்கான செலவினம் 2011-12-ல் 53 சதவீதமாக இருந்த நிலையில், அது 2022-23-ல் 46.4 சதவீதமாக குறைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment