
சென்னை: “அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நடைமுறை செயல்படுத்தப்பட்டதால் அவற்றை வாங்குவோர் பாதிக்கப்படுகிறார்கள் என பரப்பப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது. பதிவுக் கட்டணங்களைப் பொருத்தமட்டில் நமது நாட்டின் பெரும்பாலான மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் அனுமதிக்கப்படும் வழிகாட்டி மதிப்பும் முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்களும் மிகக் குறைவானதாகும்” என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பதிவுத்துறையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கிரைய ஆவணப் பதிவுகள் தொடர்பாக 2023 டிச.1ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்யும் நடைமுறை குறித்து செய்தித்தாள்களில் வேண்டுமென்றே சில தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. எனவே இது குறித்த விளக்கத்தை பதிவுத்துறை கீழ்கண்டவாறு தெரிவிக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment