
மும்பை: பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துவதற்கான கெடு தேதியை வரும் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்துள்ளது ரிசர்வ் வங்கி. முன்னதாக, வரும் 29-ம் தேதி வரை இதற்கான கெடு விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு போதுமான அவகாசம் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெள்ளிக்கிழமை (பிப்.16) அன்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment