
புதுடெல்லி: நாட்டின் கடன் சுமையைக் குறைக்கவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் பேசிய அவர், "நாட்டின் கடன் சுமையைக் குறைக்க, வரி வருவாயை அதிகரிப்பது, பொதுச் செலவினத் திறனை அதிகரிப்பது, நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. நிதி அமைப்பை வலுப்படுத்துவதுடன், அரசாங்கம் அதன் பயனுள்ள மூலதனச் செலவினத்தை உயர்ந்தியள்ளது. 2020-21-இல் ரூ. 6.57 டிரில்லியனாக இருந்த மூலதனச் செலவினம், 2023-24 மற்றும் 2024-25-இல் முறையே ரூ.13.71 டிரில்லியனாகவும், ரூ.14.97 டிரில்லியனாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment