
மும்பை: ஏர் இந்தியா விமான பயணிக்கு சக்கர நாற்காலி கொடுக்காமல் அவர் நடந்தே சென்று உயிரிழந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதற்காக அந்தநிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 12-ம் தேதி நியூயார்க்கில் இருந்து மும்பைக்கு வயதான தம்பதி பயணம் செய்துள்ளனர். மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்த அவர்களுக்கு ஏர் இந்தியா சார்பில் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து தரப்படவில்லை. இதையடுத்து, விமானத்தில் இருந்து டெர்மினலுக்கு நடந்தே வந்த 80 வயதான அந்தப் பயணி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். பிப். 16-ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ஏர் இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஏழு நாட்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment