
கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில், 20 புதிய பயிர் ரகங்களை துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வெளியிட்டார்.
இது தொடர்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் வெ.கீதா லட்சுமி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் 18 கல்லூரிகள், 40 ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 15 வேளாண் அறிவியல் நிலையங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு தட்ப வெப்ப பகுதிகளுக்கு ஏற்ப புதிய ரகங்கள் உருவாக்குவது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment