
கோவை: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத் தித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்துள்ள தமிழக அரசின் நவடிக்கையால் எதிர்வரும் காலங்களில் இத்துறையில் தமிழகம் சிறந்த வளர்ச்சியை பெறும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) உற்பத்தி, பகிர்மானம் என இரண்டு நிறுவனங்களாக செயல்பட்டு வருகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறைக்கென ‘டிஎன்ஜிசிசிஎல்’ என்ற நிறுவனம் ‘டான்ஜெட்கோ’ கட்டமைப்பில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment