
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியில் தமிழக அளவிலான மிகப் பெரிய பூண்டு சந்தை உள்ளது. பொதுவாக உள்ளூரில் உள்ள பொருட்கள்தான் அந்தந்தப் பகுதிகளில் முன்னிலைப்படுத்தப்பட்டு வர்த்தகம் நடைபெறுவது வழக்கம்.
போடியில் ஏலக்காய், ஈரோட்டில் மஞ்சள், ஸ்ரீவில்லிபுத்தூரில் பால் கோவா, ஊத்துக்குளியில் வெண்ணைய் உள்ளிட்டவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ஆனால், வடுகபட்டியில் பூண்டு விவசாயமே இல்லாத நிலையில் தமிழக அளவிலான பூண்டு வர்த்தகத்தை நிர்ணயிப்பதில் இச்சந்தை முக்கியப் பங்கு வகிக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment