
சென்னை: பெரும்பாலான மொபைல் போன் பயனர்கள் ‘லோன் வேண்டுமா?, கிரெடிட் கார்டு வேண்டுமா?’ என கேட்டு வரும் இம்சை அழைப்புகளை தினமும் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் இந்திய மொபைல் போன் பயனர்களில் சுமார் 60 சதவீதம் பேருக்கு இது மாதிரியான அழைப்புகள், நாள் ஒன்றுக்கு சுமார் மூன்று என்ற எண்ணிக்கையில் பெற்றுக் கொண்டு இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.
‘லோக்கல் சர்கிள்ஸ்’ எனும் நிறுவனம் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் தனிநபர்களை டார்கெட் செய்து முன்னணி வங்கி நிறுவனங்கள் முதல் நிதி சார்ந்து இயங்கி வரும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த வகையான அழைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைய காலமாக டெலிகாம் நிறுவனம் ஒன்றும் ‘உங்களது ரீசார்ஜ் முடிவடைந்துவிட்டது’ என டெலிபோன் சேல்ஸ் பிரதிநிதிகள் மூலம் நினைவூட்டி வரும் செயலும் குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment