
சென்னை: இண்டெல் மணி நிறுவனம் ரூ.200 கோடி திரட்டுவதற்காக கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது.
தங்கக் கடன் பிரிவில் வேகமாக வளர்ந்து வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான இண்டெல் மணி, தலா ரூ.1,000 முகமதிப்புள்ள பாதுகாப்பான, மாற்ற இயலாத கடன் பத்திரங்களின் (என்சிடி) 4-வது வெளியீட்டை அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி 30-ல் தொடங்கிய இந்த வெளியீடு, வரும் 12-ம் தேதி முடிவடைய உள்ளது. ஒரு என்சிடியின் முகமதிப்புரூ.1,000. குறைந்தபட்ச முதலீட்டு அளவு 10 என்சிடிகள் (ரூ.10,000) ஆகும். கூப்பன் மூலம் ஆண்டுக்கு அதிகபட்சம் 12.25% வரை வட்டியைப் பெறலாம். 72 மாதங்களில் முதலீடு இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment