
ஈரோடு / மேட்டூர் / நாமக்கல்: வருமானவரி சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோட்டில் 5,000-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து ஜவுளி வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறு, குறு தொழில்கள் தங்களது வணிகக் கடன்களை விரைந்து வசூல் செய்வதற்கு ஏதுவாக மத்திய அரசு வருமான வரி சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றம் ( பிரிவு 43 பி ( எச் ) ) காரணமாக சிறு, குறு வணிக நிறுவனங்களின் இருப்பு நிலை குறிப்பு கணக்கில் இருக்கும் வணிக கடன் நிலுவைகள், 45 நாட்களுக்கு மேலே சென்றிருந்தால், அவை வருமானமாக கருதப்பட்டு, அவற்றிற்கு வரி விதிக்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment