
திருப்பூர்: திருப்பூரில் 50 நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள் பங்கேற்கவுள்ள சர்வதேச அளவிலான பின்னலாடை கண்காட்சி அக்டோபர் 12-ம் தேதி தொடங்க உள்ளதாக, இந்திய நிட்பேர் அசோசியேஷன் மற்றும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவரான ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய சர்வதேச பின்னலாடை 50-வது பொன்விழா கண்காட்சி அக்டோபர் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 3 நாட்கள், திருப்பூர் பழங்கரை ஐ.கே.எப். வளாகத்தில் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் கலந்துகொள்ள 50 நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக முகவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment