
மும்பை: இந்தியாவில் 2,000 ரூபாய் நோட்டுகளில் 93 சதவீதம் வங்கிகள் வசம் வந்து சேர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சுமார் 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி, ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் அறிவிப்பினை கடந்த மே 19-ம் தேதி வெளியிட்டது. இந்த நோட்டுகளை வரும் 30-ம் தேதி வரையில் மக்கள் மாற்றிக்கொள்ளலாம் என கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ரூ.2,000 நோட்டுகளை எளிதான முறையில் வங்கிகளில் மாற்றிக்கொள்ள போதுமான முன்னேற்பாடுகள் செய்யபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment