
தஞ்சாவூர்: தீபங்கள் பேசும்... இது கார்த்திகை மாதம்... மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே என வீடுகளில் பெண்கள் உற்சாகமாக விளக்கேற்ற தஞ்சாவூரில் விதவிதமாக மண் விளக்குகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்தனர். தஞ்சாவூர் கீழவாசல் பகுதிகளில் 50-க்கும்மேற்பட்டோர் மண்பாண்டத் தொழில் செய்து வருகின்றனர்.
வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, இவர்கள் தற்போது அகல்விளக்கு, திருஷ்டி விளக்கு, அன்னகாமாட்சி விளக்கு, குத்து விளக்கு, நந்தி விளக்கு, சர விளக்கு என 20 வகையான விளக்குகளை தயாரித்து வருகின்றனர். இந்த விளக்குகள் ரூ.1 முதல் ரூ.1,500 வரை விற்கப்படுகின்றன. இந்நிலையில், தற்போது அவ்வப்போது மழைபெய்து வருவதால், தயாரிக்கப்படும் விளக்குகளை சூளையில் வைத்து சுடமுடியாமலும், வெயிலில் காய வைக்க முடியாமலும் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment