
கோவை: கோவையில் இனிப்பு, காரம் தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் கடந்த 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ் செல்வன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய 9 குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மொத்தம் 104 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 8 கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, அதிக அளவு நிறமிகள் சேர்க்கப்பட்ட 501.3 கிலோ உணவுப் பொருள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.1.10 லட்சம் ஆகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment