About

தூய்மைப் பணி எதிரொலி | அலுவலக குப்பைகளை அகற்றியதால் மத்திய அரசுக்கு ரூ.500 கோடி வருவாய்!

புதுடெல்லி: சமீபத்தில் நடந்து முடிந்த தூய்மைப் பணியின்போது அலுவலக குப்பைகளை அப்புறப்படுத்தியதன் மூலம் ரு.500 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நரேந்திர அரசு சிறப்பு தூய்மைப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசு அலுவலகங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதன் மூலம் கடந்த 2021 முதல் 2023 வரை ரூ. 1,100 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குப்பைகளை அகற்றுவதற்கான மூன்றாவது சிறப்பு பிரச்சாரம் இந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் தேவையற்ற பொருட்களை அகற்றியதன் மூலம் அரசு ரூ. 500 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: