
சென்னை: சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியை வீடுகளில் இருந்து டிவிகளில் பார்க்கும் ஆர்வத்தில் பெரும்பாலானோர் நேற்று வெளியூர் பயணத்தை தவிர்த்தனர். அதனால், நேற்றுவிமானங்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment