
புதுடெல்லி: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்ஜாலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரும் இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் உள்ளது. ஆசியா, ஆப்ரிக்கா உட்பட உலக அளவில் 40 நாடுகளுக்கு அந்நிறுவனம் வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பாக 2022 மார்ச் மாதம், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்குச் சொந்தமான 25 இடங்களில் வருமான வரித் துறை சோதனையில் ஈடுபட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment