
திருச்சி: மேட்டூர் அணை மூடப்பட்டுள்ளதாலும், போதிய மழை பெய்யாததாலும் பயிர்க் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வழக்கமாக டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி ஏறத்தாழ 8 லட்சம் ஏக்கரில் நடைபெறும். ஆனால், நிகழாண்டு மேட்டூர் அணை பாதியிலேயே மூடப்பட்டதாலும், போதிய அளவில் மழை இல்லாததாலும் விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை தொடங்காமல் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment