
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் இனிப்பு வகைகள் தற்போது வரை ரூ.60கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
ஆவின் பணியாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் 8.33 சதவீதம் மற்றும் கருணைத்தொகை 11.67 சதவீதம் என மொத்தம் 20 சதவீதம் வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டார். அதன்படி, சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், தீபாவளி மிகை ஊதியம், கருணை தொகையாக ரூ.5.96 கோடி வழங்க முடிவு செய்து, நந்தனம் ஆவின் இல்லத்தில் பணியாளர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று முன்தினம் இரவு வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment