
சென்னை: பிரதமர் மோடியின் மக்கள் மருந்தகங்களைபோல, சாமானியர்களுக்கு மலிவு விலையில் பொருட்களை வழங்க மக்கள் மளிகைக் கடைகளை திறக்க வேண்டும் என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 5 அடுக்குகள் கொண்ட மாநில தலைமை அலுவலக கட்டிடம் சென்னை கே.கே.நகரில் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேரமைப்பின் பொதுச்செயலாளர் வி.கோவிந்தராஜூலு அனைவரையும் வரவேற்றார். மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கதுல்லா பேரமைப்பின் கொடியை ஏற்றிவைத்தார். தலைமைச் செயலாளர் ஆர்.ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, துணைத் தலைவர் ஜி.டி.ராஜசேகர், செய்தித் தொடர்பாளர் பி.பாண்டியராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையுரையாற்றினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment