
விஜயவாடா: தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். இதற்காக ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள பாலாஜி ஸ்வீட்ஸ் என்ற கடையில் கடந்த சில நாட்களாக தீபாவளி சிறப்பு இனிப்பு என்ற பெயரில் விதவிதமான புதிய ரக இனிப்பு பலகாரங்கள் விற்பனை செய்யப்பட்டன.
குறிப்பாக 24 கேரட்டில் தங்க முலாம் பூசப்பட்ட ஒருவகையான இனிப்பு பலகாரத்தை அந்த கடை அறிமுகம் செய்தது. அதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு காணப்பட்டது. இந்த இனிப்பு வகையை வாங்க கடையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. புதிய வகை பலகாரம் தங்க கோவா போல் இருந்ததாலும், திகட்டும் அளவுக்கு இனிப்பு இல்லாத காரணத்தினாலும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிட்டனர். ஏராளமானோர் வீடுகளுக்கு பார்சல்களை வாங்கி சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment