
சென்னை: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சார்பில் `எல்ஐசி ஜீவன் உத்சவ்' எனும் புதிய திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எல்ஐசி ஜீவன் உத்சவ் என்பது ஒரு தனிநபர், சேமிப்பு, முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தில் 90 நாட்கள் முதல் 65 வயது உள்ளவர்கள் வரை பயன்பெறலாம். ஆயுள் முழுவதும் உறுதியளிக்கப்பட்ட வருமானம் மற்றும் ஆயுள் முழுவதும் காப்பீட்டு பாதுகாப்பு உண்டு. குறைந்தபட்ச பிரீமியம் செலுத்தும் காலம் 5 ஆண்டுகளாகவும் அதிகபட்ச பிரீமியம் செலுத்தும் காலம் 16 ஆண்டுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment