
சென்னை: சென்னை மாவட்ட தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 293 குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ரூ.5,566.92 கோடி புதிய முதலீட்டுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டன.
சென்னையில் 2024 ஜன.7, 8-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதையொட்டி, மாவட்ட வாரியாக தொழில் முதலீடு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மாவட்ட தொழில் முதலீடு, கிண்டியில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில், 293 குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) ரூ.5,566.92 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment