
சிவகாசி: தீபாவளியையொட்டி, நாடு முழு வதும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசுகள் விற்பனை ஆனது. இதனால் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய அளவில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் இங்கு 95 சதவீதத்துக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சிவகாசி பட்டாசு ஆலைகளில் பசுமைப் பட்டாசு மட்டுமே உற் பத்தி செய்யப்படுகிறது.
பல்வேறு கட்டுப்பாடுகள்: சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிரந்தர உரிமம் பெற்ற 2,500-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனைக் கடைகள் உள்ளன. பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை, சரவெடி உற்பத்திக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் 60 சதவீத பட்டாசுகள் மட்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன. மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டால், கடந்த ஆண்டு பட்டாசு விலை 40சதவீதம் அதிகரித்தது. இருப்பினும்ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு முன்னதாகவே, ஆஃப் சீசன் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. ஆஃப் சீசன் விற்பனை பாதிப்பு மற்றும் வடமாநிலஆர்டர் குறைவு ஆகிய பிரச்சினை கள் இருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment