
தஞ்சாவூர்: குறைந்த அளவே இழப்பீடு வழங்குவதால், சம்பா பருவத்தில் பயிர்க் காப்பீடு செய்ய தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. 1.40 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்துள்ள நிலையில், இதுவரை 14,616 ஏக்கருக்கு மட்டுமே விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர்.
நிகழாண்டு ரபி சிறப்பு பருவத்தில் திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ.15-ம் தேதி கடைசி நாளாகும். இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு செய்ய இப்கோ டோக்கியோ பொது காப்பீடு நிறுவனம், பியூச்சர் ஜெனராலி இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment