
கோவை: தமிழக ஜவுளித்தொழில் மற்ற மாநிலங்களுடன் போட்டியிடும் வகையில், பல்வேறு சலுகைகள் அடங்கிய புதிய ஜவுளி கொள்கை விரைவில் வெளியிடப்படும் என, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார். தமிழக அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித்துறை மற்றும் இந்திய தொழில்கள் கூட்டமைப்பு சார்பில் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு கோவையில் நேற்று நடந்தது. தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை வகித்து பேசியதாவது: அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் தொழிலாக ஜவுளித் தொழில் விளங்குகிறது. எதிர்காலம் தொழில்நுட்ப ஜவுளித் துறையின் வளர்ச்சியை சார்ந்தே அமையும் என்பதை உணர்ந்த தமிழக அரசு, ஜவுளித் துறைக்கு முன்னுரிமை அளித்து அதனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்தாண்டு சென்னையில் பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நிகழ்வு கோவையில் நடத்தப்படுகிறது. ஜவுளித் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்கப்படுத்த சிறப்பான திட்டங்களை வகுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழக ஜவுளித் தொழில் மற்ற மாநிலங்களுடன் போட்டியிடும் வகையில், பல்வேறு சலுகைகள் அடங்கிய புதிய ஜவுளி கொள்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இந்தியாவில் ஜவுளித் தொழிலில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்க முதலமைச்சர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment