
சிவகாசி: தீபாவளி பண்டிகை நெருங்கியதை அடுத்து சிவகாசி பகுதிகளில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து பட்டாசு வாங்குவதற்காக வாகனங்களில் சிவகாசிக்கு அதிகளவில் மக்கள் வருவதால், நகரின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த விற்பனைக் கடைகள் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment