
சென்னை: சமூக உள்கட்டமைப்புகளை அதிகரிப்பது நாட்டின் வளர்ச்சியின் முக்கிய தூண்கள் என்றும், 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பாதையில் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படுகின்றன என்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த தமிழ்நாடு உள்கட்டமைப்பு உச்சிமாநாடு 2023-ன் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், "2014-ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் அனைத்து உள்கட்டமைப்புகளும் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டத்தின் கீழ் 16 அமைச்சகங்கள் இது தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, கடல் வழிப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்து உள்கட்டமைப்புகளும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment