
கோவை: தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி, கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட ஓஇ நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. ஸ்பின்னிங் மில்களில் இருந்து பெறப்படும் கழிவுப்பஞ்சைப் பயன்படுத்தி, தினமும் 25 லட்சம் கிலோ நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
ஏற்கெனவே மின் கட்டணஉயர்வால் தொழில் துறையினர்நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இச்சூழலில், ஓஇ நூற்பாலைகளில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருளான கழிவுப்பஞ்சு விலை தொடர்ந்து அதிகரித்துவருவது, உற்பத்தியை மேலும் பாதித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment