
திருப்பூர்: நடப்பு மாத முதல் வாரத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் ஓர் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதில் ‘இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க பல கடைகளில் மறுக்கப்படுகிறது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க ஒருவர் மறுத்தால், இந்திய தண்டனை சட்டம் 124-ன் படி குற்றம். இதற்கு குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படும். 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல ஆண்டுகளாக 10 ரூபாய் நாணயங்களை தேநீர், மளிகை உட்பட பல்வேறு கடைகளில் வாங்க மறுப்பதால், பொதுமக்கள் அதிருப்திக்குள்ளாகி வருகின்றனர். இந்திய ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயத்தை 2005-ம் ஆண்டு வெளியிட்டது முதல் நாணயம் புழக்கத்தில் இருந்து வருகிறது. இதுவரை ரிசர்வ் வங்கி 14 வகையான ரூ.10 நாணயங்களை வெளியிட்டுள்ளது. ஒவ்வொன்றும், மற்றொன்றில் இருந்து மாறுபட்டவை. இதனால் பயன்படுத்தும் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment