
மும்பை: பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் eCOM மற்றும் இன்ஸ்டா இஎம்ஐ கார்டு மூலம் கடன் வழங்குவதை நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. டிஜிட்டல் முறையில் கடன் வழங்குதல் தொடர்பான தற்போதைய விதிகளை கடைபிடிக்காத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சுலப மாத தவணை முறையில் பொருட்கள் வாங்கவும், நிதி சார்ந்த கடன் பெறவும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் உதவி வருகிறது. இந்த நிறுவனம் நாள்தோறும் இந்தியாவில் பல்வேறு வகையிலான கடன்களை வழங்கி வருகிறது. இந்த சூழலில் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் இரண்டு புராடக்ட்களின் கீழ் கடன் வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் பிரிவு 45L(1)(b)-ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment