
சேலம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர்கள், தொழில்நுட்ப ஜவுளித் துறையிலும் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக, கோவையில் வரும் 17-ம் தேதி தொழில்நுட்ப ஜவுளித்துறை மாநில மாநாடு நடத்தப்படுகிறது என்று தமிழக அரசின் துணி நூல் துறை ஆணையர் வள்ளலார் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் துணிநூல் துறை, இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் தொழில்நுட்ப ஜவுளித்துறை சார்ந்த 2-வது மாநில மாநாடு கோவையில் வரும் 17 மற்றும் 18-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக அரசின் துணிநூல் துறை ஆணையர் வள்ளலார் தலைமை வகித்தார். இந்திய தொழில் கூட்டமைப்பு சேலம் மண்டல துணைத் தலைவர் அசோக்குமார், இணை ஒருங்கிணைப்பாளர்கள் வேல் கிருஷ்ணா, மகேந்திரகுமார் சர்மா மற்றும் தொழில் முனைவோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment